Skip to content

தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார்

திராவிட அரசியல் வரலாறு - 1

₹150₹142
5% OFF

பண்ணன் எழுதிய தமிழ்ச் செல்வங்களுக்குத் தந்தை பெரியார் - சாதிப் பாகுபாடு, மூடநம்பிக்கை ஒழிப்பு, சுயமரியாதை ஆகியவற்றை வலியுறுத்தும் சிறந்த புத்தகம்.

Category History
Publisher விடியல்
Language தமிழ்
Pages 132
Year 2024
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788189867282

Description

சிலரும் மூடநம்பிக்கைகளையும் வேறு சாத்திரங்களையும் சாடினர். சாதிப் பாகுபாடு நமக்குள்ளே உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்கிற வேறுபாடு கூடாது எனக் கூறினர். இவர்களில் எவருமே செயலில் ஈடுபடவில்லை. ஓரிருவர் செயலில் இறங்கியிருந்தாலும் ஓர் இயக்கத்தை உருவாக்கிப் பணியாற்றவில்லை. பலர் சாதிப்பிரிவினை கூடாது என்றார்களே தவிர சாதிகள் ஒழிய வேண்டும். ஒழிக்கப்படவேண்டும் என்று கூற முன்வரவில்லை.

பெரியார் ஒருவரே தமிழ் மக்கள் இவ்வாறு தாழ்ந்து கிடப்பது ஏன் என எண்ணிப் பார்த்தார். அதற்கான காரணங்களை ஆராய்ந்தார். தமிழனின் தாழ்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் முதல் காரணம் அவன் தன்னை உணராமல் இருப்பதே என அறிந்தார். அவனுக்குக் கேடு விளைவித்தோர் விளைவிப்போர் யார் என்பதையும் துல்லியமாக உணர்ந்தார். தமிழர்களை ஒன்றுபடுத்த வேண்டுமானால் அவர்களிடையே ஏற்படுத்தப்பட்டு, வேரூன்றிக் கிடக்கின்ற பிரிவினைகளை ஒழிக்க வேண்டும்; அந்தப் பிரிவினைகளுக்குக் காரணமானவற்றை அழிக்க வேண்டும் என்று திட்டமிட்டார்.