மனசுக்குள் வரலாமா
சுவாமி மித்ரானந்தா எழுதிய மனசுக்குள் வரலாமா - மன அமைதிக்கும், தெளிவான வாழ்க்கைக்கும் உதவும் வழிகாட்டி. இளைஞர்களின் தடுமாற்றத்திற்கு நம்பிக்கையூட்டும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Faith and Spirituality |
Description
கூட்டுக் குடும்பங்கள் உடைந்து, பெரியவர்களின் அனுபவ அறிவைப் பெறுவதற்கான வாய்ப்பு இல்லாமல், இளைய தலைமுறையினரின் தடுமாற்றம் நாளுக்கு நாள் கூடிக்கொண்டே போகிறது. அவசர உலகத்தின் நிர்ப்பந்தங்கள் வேறு, தெளிவான நுடிவுகளை எடுக்கவிடாமல் அவர்களைப் போட்டு நெருக்குகிறது. எனவே, இன்று நம்பிக்கைக்கு உரிய நல்லவர்களின் அறிவுரை என்பது விலைமதிப்பில்லாதது. விகடனில் சுவாமி சுகபோதானந்தா மற்றும் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆகியோர் எழுதிய தொடர்களுக்கு எல்லையில்லாத வரவேற்பு கிடைத்ததும் இந்த காரணங்களால்தான். இந்த வரிசையில் வாசகர்களால் ஆரவாரத்துடன் வரவேற்கப்பட்ட இன்னொரு தொடர்தான், சுவாமி மித்ரானந்தா வின் 'மனசுக்குள் வரலாமா?'. அலைபாய்ந்த பல மனங்களுக்கு அமைதி தந்த அந்தத் தொடர், இப்போது புத்தக வடிவில் _ ஒரு நிரந்தர நண்பனாக, நல்ல குருவாக, சிறந்த வழிகாட்டியாக!
