நீதித் திரைக்குப் பின்னே
நீதியரசர் கே. சந்துரு எழுதிய நீதித் திரைக்குப் பின்னே - நீதிமன்ற வழக்குகள், தீர்ப்புகள் மற்றும் நீதித்துறையின் பின்னணியை வெளிச்சம் போட்டுக் காட்டும் ஒரு நூல்.
| Category | Article |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9789394265455 |
Description
இந்தியாவின் இறையாண்மை நீதித் துறையின் கையில் இருக்கிறது என்பதை பல தீர்ப்புகள் எடுத்துச் சொல்லியிருக்கின்றன. அதனால்தான் சாமானியர்களும் தனக்கு ஒரு பிரச்னை என்றால் நீதிமன்றத்தை நாடுகிறார்கள். ஆனாலும் சில நீதிபதிகளால் சில தீர்ப்புகளால் நீதித் துறை மீது சற்று சலிப்பு ஏற்படுகிறது என்பதை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டுகளாக உள்ளன. அப்படிப்பட்ட வழக்குகள் பற்றி நீதிபதி சந்துரு விகடன் இதழ்களிலும் மற்ற இதழ்களிலும் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல். பாபர் மசூதி வழக்கு போன்ற வழக்குகளில் சில நீதிபதிகள் தங்களின் தனிப்பட்ட கருத்துகளை வழக்கின்போதும் தீர்ப்புகளின்போதும் வெளியிடு கிறார்கள். அப்படி என்னென்ன வழக்குகளில் என்னென்ன நடந்தன என்பன பற்றி விளக்கி யிருக்கிறார் நீதிபதி சந்துரு. உச்ச நீதிமன்றத்திலும் உயர் நீதிமன்றங்களில் நடைபெற்ற முக்கிய வழக்குகளையும் அவற்றின் மீது வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் அறிந்துகொள்ளுங்கள்!
