ஓ! பக்கங்கள் (பாகம் 1)
ஞாநி எழுதிய ஓ! பக்கங்கள் (பாகம் 1) - சமூக விமர்சனங்கள், ஊடகப் பார்வை, மற்றும் சிந்தனையைத் தூண்டும் கட்டுரைகளின் தொகுப்பு. நேர்மையான விமர்சனங்கள் நிறைந்த புத்தகம்.
| Category | Article |
|---|---|
| Publisher | விகடன் பிரசுரம் |
| Language | தமிழ் |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
உணர்வுள்ள எந்தக் குடிமகனும் தான் வாழும் சமூகம் பற்றி தீர்க்கமான சிந்தனைகளோடு இருப்பது அவசியம். அந்தச் சிந்தனைகளை அடுத்தவர்களோடு பகிர்ந்துக்கொள்வதும் அவசியம். மக்களின் பார்வையில் மக்களின் எதிர்கால நலனை மனதில் வைத்து கூர்மையான பார்வையோடு, சமூகத்தில் நடப்பவற்றை எந்தப் பக்கச்சார்பும் அற்று விமர்சிப்பது அவசியம். அந்த வகையில் ஞாநியின் 'ஓ! பக்கங்கள்' கூர்மையான விமர்சனங்கள். நேர்மையான பார்வைகள். விகடன் குழும இதழ்களில் எழுதுபவராகவும் சமயங்களில் பணியாற்றுபவராகவும், கடந்த முப்பதாண்டுகளாகத் தொடர்ந்து விகடன் வாசகர்களுடன் தொடர்பில் இருந்து வருபவர் ஞாநி. எண்பது வாரங்களைக் கடந்து ஆனந்த விகடன் வாசகர்களின் பேராதரவுடன் தொடர்ந்து வெளியாகிக் கொண்டிருக்கும் ஞாநியின் ஓ! பக்கங்களில் இருந்து இரு பாகங்கள் வெளியிடுகிறோம். இது முதல் தொகுப்பு. பத்திரிகை, நாடகம், தொலைக்காட்சி, இளைஞர்களுக்கான மீடியா _ பெண்ணிய _ ஆளுமைப் பயிற்சி வகுப்புகள் என்று எந்தத் துறையில் இயங்கினாலும், அதில் தன் தனி முத்திரையைப் பதித்து வருகிறார்.
