Skip to content

இலங்கைப் போர்

இராமச்சந்திரா தொகுதி 4

₹499.00

அமிஷ் திரிபாதியின் 'இலங்கைப் போர்' நாவல், ராமாயணக் கதையைத் தர்மத்தின் போராக விவரிக்கிறது. இப்போதே வாங்குங்கள்!

Category Novel
Publisher வெஸ்ட்லேண்ட் பப்ளிகேஷன்ஸ்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

பேராசை, பெருங்கோபம், துக்கம், காதல், போரைத் தூண்டக்காத்திருக்கும் புகையும் சரகுகள்.ஆனால் இந்தப் போர் வித்தியாசமானது. இது தர்மத்திற்கானப் போர். அனைவரிலும் சிறந்த பெண் தெய்வத்திற்கானப் போர்.சீதா கடத்தப்பட்டுள்ளாள். எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், ராவணன் தன்னைக் கொல்ல சவால் விடுகிறாள் ராம் சரணடைய அனுமதிப்பதைவிட தான் இறப்பதை விரும்புவாள்.கட்டுக்கடங்காத கோபம் மற்றும் பெருத்துக்கத்தில் இருக்கிறான் ராம். போருக்குத் தயாராகிறான். சிற்றம் அவனது எரிபொருள். அமைதியான கவனம் அவனது வழிகாட்டி.தன்னை எவராலும் வெல்லமுடியாது என்று நினைத்திருந்தான் ராவணன். சொல்லாடல் மூலம் சரணடைய வற்புறுத்திவிடலாம் என்று எண்ணியிருந்தான். ஆனால், இப்படி நடக்குமென்று அவன் சிறிதும் அறியவில்லை...இந்திய வெளியீட்டு வரலாற்றில் அதிவேகமாக விற்பனையாகும் புத்தகத் தொடர்களில் இரண்டாவது இடத்தைப் பெற்ற இராமச்சந்திரா தொடரின் முதல் மூன்று புத்தகங்கள், ராம், சீதா மற்றும் ராவணனின் தனிப்பட்ட வாழ்க்கைப் பயணத்தை ஆராய்கிறது. இந்தப் புத்தகத் தொடரின் நான்காவது காவிய படைப்பான இந்நூலில் இம்மூவரின் கதைகள் இழைந்தோடி, படுகொலையாக மாறும் ஒரு போராக வெடித்துச் சிதறுகிறது.தர்மத்தின் விதிகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள ராம் இரக்கமற்ற அரக்கன் ராவணனைத் தோற்கடிப்பானா? இக்கட்டான மூலையில் மாட்டிய புலியைப்போல் எதிர்த்துப் போராடுமா அல்லது எரிந்து சாம்பலாகுமா இலங்கை? போருக்கு கொடுக்கப்படவேண்டிய விலைக்கு தகுதியானதா வெற்றி?மிக முக்கியமாக, விஷ்ணு எழுவாரா? மண்ணின் உண்மையான எதிரிகள் அவரைக் கண்டு அஞ்சுவார்களா? ஏனென்றால் அச்சத்திலிருந்து பிறப்பதுதான் அன்பு.