Skip to content

அம்புப் படுக்கை

சாகித்திய அகாதெமி யுவ புரஸ்கார் விருது (2018)

₹180₹171
5% OFF

சுனில் கிருஷ்ணன் எழுதிய அம்புப் படுக்கை - பீஷ்மரின் தியாகம், வலி, வாழ்வின் அர்த்தம் குறித்த ஆழமான தத்துவப் பயணத்தை உணர்த்தும் கதை.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 154
Year 2017
Format Paperback
Tags Philosophy and Thought

Description

பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பீஷ்மர் எனக்குத் தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரு விழைவும் வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறுஎல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராகப் பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.