Skip to content

எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன்

₹480₹456
5% OFF

தீபச்செல்வன் எழுதிய எழுத்தால் நான் யுத்தம் செய்கிறேன் - போர், அகதி வாழ்வு, இலக்கிய அனுபவங்கள் நிறைந்த நேர்காணல் தொகுப்பு. தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆவணம்.

Category Interview
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 368
Year 2026
Format Paperback
Tags Life and Society
SKU 9789348722256

Description

இலங்கையின் தமிழ் இலக்கிய உலகில் மிகத் தீவிரமான,தளராத குரல்களில் ஒருவரான கவிஞர், நாவலாசிரியர், பத்திரிகையாளர் தீபச்செல்வன் அவர்களுடன் நடைபெற்ற முக்கிய நேர்காணல்களின் தொகுப்பிது.

ஒரு தசாப்தத்துக்கும் மேலான காலப்பகுதியை உள்ளடக்கிய இந்நூல், போர், இடம்பெயர்வு, அகதி வாழ்வு, அரசுக் கண்காணிப்பு ஆகியவற்றின் நடுவில் ஒரு எழுத்தாளராக உருவான தீபச்செல்வனின் அனுபவங்களையும் சிந்தனைகளையும் நேரடியாகப் பதிவு செய்கிறது.

இந்த நேர்காணல்களின் வழியாக, போரால் சிதைந்த குழந்தைப் பருவம். முகாம் வாழ்க்கை, நிலம் நினைவு மொழி, அடக்கு முறையின் கீழ் எழுதுவதன் அரசியல் பொறுப்பு என்னும் கருப்பொருள்கள் விரிவாகப் பேசப்படுகின்றன.இங்கு எழுத்து ஒரு கலை வடிவமாக மட்டுமல்ல; சாட்சியமாகவும், எதிர்ப்பாகவும், உயிர்வாழ்தலின் வழியாகவும் மாறுகிறது.

ஒரு தனிநபரின் வாழ்க்கை வரலாறாக அல்ல, ஒரு மக்களின் கூட்டுத் துயரமும் தளராத பண்பாட்டு நினைவுமாக இந்நூல் தன்னை நிறுவுகிறது.