Skip to content

கனவுராட்டினம்

₹140₹133
5% OFF

மாதவன் ஸ்ரீரங்கம் எழுதிய கனவுராட்டினம் - யதார்த்தத்தின் சுழற்சியை உணரும் கலைப் படைப்பு! இந்த நாவல், மொழி மற்றும் கலைஞனின் சிந்தனையைத் தூண்டும் ஒரு புனைவு.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 152
Format Paperback
Tags Philosophy and Thought

Description

புனைவு கொடுக்கின்ற கட்டற்ற சுதந்திர வெளியை,மொழி கொடுக்கின்ற அற்புத வாய்ப்புகளைக் கலைஞனின் சிந்தனையோட்டத்தின் வேகத்திற்கோ அல்லது அதன் வீச்சிற்கு இணையாகவே அல்லது ஓரளவுக்கு அதனைத் துரத்திப்பிடிக்கும் அளவிற்குப் புனைவுகளில் பயன்படுத்துவது மிகவும் அரிதாகவே நம் மொழியில் நடைபெறுகின்றது.

உலகின் மாற்றங்களை வேறு ஒரு புள்ளியிலிருந்து கவனிக்க ஆரம்பித்தால்,யதார்த்தம் என்று நம்பப்படும் யாவுமே வேறு எங்கோ சுழல ஆரம்பிக்கும்,ஏனெனில் கலைக்கு மையம் என்பது நிரந்தரப் புதிர்.மாதவன் அப்படியான ஒரு சுழற்சியை உணர்ந்து பார்த்திருக்கிறார்.அதுதான் கனவு ராட்டினம்.