Skip to content

கேள்விகளின் புத்தகம்

₹425₹403
5% OFF

பாப்லோ நெரூதா எழுதிய கேள்விகளின் புத்தகம் - கவிதைகள், தத்துவங்கள் நிறைந்த நெரூதாவின் படைப்பு! தனிமை, உணர்ச்சிகள், இயற்கையின் இரகசியங்களை அறிய சிறந்த புத்தகம்.

Category Poetry
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 248
Year 2022
Format Paperback
Tags Philosophy and Thought

Description

தொட்டதையெல்லாம் பொன்னாக்கிய மிதாஸ் அரசனைப் போல, தொட்டதையெல்லாம் கவிதையாக்கியவர் என்று நெரூதாவை அழைத்த மார்க்வெஸ். இருபதாம் நூற்றாண்டில் எந்த மொழியிலும் மகத்தான தவிஞர்.இவர் தான் என்றார். பூனையை, தக்காளியை, ரொட்டியை, மக்காச்சோளத்தை, எனுமிச்சையை, உப்பினை, வெங்காயத்தை சுவிதைகளாக உருமாற்றியவர், கவிதையின் வரையறைகளைக் கலைத்தவர். ஒரு கவிதையை எழுதுவதற்கான முறையினை எந்தப் புத்தகத்திலிருந்தும் தான் கற்றுக் கொண்டிருக்கவில்லை என்ற நெரூதா, தனது நீண்ட பயணத்தில் அதற்கான பங்களிப்புகளை பூமியிலிருந்தும் ஆன்மாவிலிருந்தும் பெற்றதாகச் சொன்னார். கவிதைக்கலை என்பது "அற்ப ஆயுளுடையதோ அல்லது வீறார்ந்ததோ, அதில் சமப் பங்களிப்பவையாக இருக்கும் தனிமைவாசம் மற்றும் கூட்டொருமை, உணர்ச்சிகள் மற்றும் செயல்பாடு, தன்ளிலையுடனான மனிதகுலத்தினுடனான அருகாமை, அப்புறம் இயற்கையின் இரகசிய வெளிப்படுத்தல்கள் ஆகியவற்றின் ஒரு வினை" என்று தனது நோபல் பரிசுரையில் குறிப்பிட்டார். பிரம்மராஜனின் மொழிபெயர்ப்பில் தமிழுக்கு நெருதா வருகிறார் கவிதைகளோடும் கேள்விகளின் புத்தகத்தோடும்: கொடுங்கோன்மையை இசுழ்ந்தவாறும், தேனீக்களை, ஈக்களை, திராட்சைகளை, செர்ரிப்பழங்களை, மக்காச்சோளக் கதிர்வயல்களை. பாப்பி மலர்களை, இலையுதிர் காலங்களை, வண்ணத்துப் பூச்சிகளை, பட்டுப்புழுக்களை, கோளகங்களை, வறியவர்களை, கடவுளை, பாலைவனங்களை, ஆறுகளை.

-இரா.சுகந்தன்