லாஞ்சனை
எஸ். காமராஜ் எழுதிய லாஞ்சனை - கரிசல் மக்களின் வாழ்வையும், வலியையும், நம்பிக்கையையும் பேசும் கதை. பட்டாசு ஆலை விபத்துகள், வறுமை, சாதிய வன்மம் நிறைந்த ஒரு காலத்தின் பதிவு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | யாவரும் பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
சாத்தூர் மற்றும் சிவகாசியைச் சுற்றியுள்ள கரிசல் மண்ணின் நிலப்பரப்பில், வெடிமருந்து வாசனையோடு கலந்திருக்கும் எளிய மனிதர்களின் வாழ்வியலை இந்தப் புத்தகம் பேசுகிறது.
வாழ்நாள் முழுவதும் உழைத்தும் தீராத வறுமை, எதிர்பாராத தருணத்தில் கனவுகளைக் கரிக்கச் செய்யும் பட்டாசு ஆலை விபத்துகள், கல்வி மறுக்கப்பட்ட சிறுவனின் கவசகுண்டலமாய் இருக்கும் ஒரு பேனா என ஒவ்வொரு கதையும் இதயத்தின் ஆழத்தைத் தொடுபவை.
"ஏமாளி" என்றுஉலகம் எள்ளிநகையாடும் மனிதர்களிடம் பொதிந்துள்ள பேராற்றல்கொண்ட அன்பையும், நகர நெருக்கடியில் தொலைந்துபோகும் கிராமத்து வேர்களையும், சாதிய வன்மத்தைத் தன் ஈரமான மனிதாபிமானத்தால் வெல்லும் அர்ச்சுனன்களையும் இக்கதைகளில் நீங்கள் சந்திக்கலாம்.
வெறும் எழுத்துக்களாக அல்லாமல், வலியும் நம்பிக்கையும் கலந்த ஒரு காலத்தின் ஆவணமாக விரிகிறது எஸ். காமராஜின் இக்கதை உலகம்.
