Skip to content

நுழைவாயில்

முஹம்மது யூசுப் எழுதிய நுழைவாயில் - நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் தூத்துக்குடி கலவரம் பின்னணியில் ஒரு அழுத்தமான நாவல். வாழ்க்கைப் போராட்டங்களைச் சித்தரிக்கிறது.

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language தமிழ்
Pages 460
Year 2023
Format Paperback
Tags Life and Society

Description

வாழ்வில் ஒருவனின் எல்லா பக்கங்களிலும் மிஞ்சி நிற்பது நட்பு எனும் ஆத்மார்த்த உறவு மட்டுமே. 60 வயதைத் தொட்டு விட்ட மூன்று தகப்பன்களின் வாழ்க்கையைப் பற்றிப் பேசும் இந்த நாவல் வழியாக அவர்களின் மகன்களை, குறிப்பாக அவர்களது நண்பர்களை, அவர்கள் கொண்டிருந்த கருத்தியலைப் பற்றிப் பேசும் கதை இது.

தமிழகத்தின் நுழைவாயில் என அழைக்கப்பட்ட தூத்துக்குடி ஊரின் சமகால அடையாளமாகச் சுட்டிக்காட்டப்படும் கலவரம், ரவுடித்தனம், வெட்டுக்குத்து, சாதிக் கொலைகள் என்று போர்த்தப்பட்ட மோசமான சால்வைகளை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்பது தான் நாவலின் கரு.