Skip to content

நூறு மின்னல்கள் (பாகம் 1)

₹290.00

மாயன் எழுதிய ‘நூறு மின்னல்கள்’ நாவல், 2002 போர் நிறுத்த ஒப்பந்தம் முறிவடைந்ததற்கான காரணிகளை விவரிக்கிறது. ஈழப்போரின் பின்னணியை அறிய இன்றே வாங்குங்கள்!

Category Novel
Publisher யாவரும் பதிப்பகம்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

ஈழவரலாற்றை, குறிப்பாக முள்ளிவாய்க்களில் நடந்தேறிய இனப்படுகொலையை பேசுபொருளாகக் கொண்டு பல படைப்புகள் வெளியாகியுள்ளன. ஆனால், விடுதலைப்புலிகளுக்கும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் 2002-ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் 2006-ல் முறிவடைந்தது. நான்காம் கட்ட ஈழப்போருக்கு வழிவகுத்த காரணிகள், சூழல் பற்றி வெளியான படைப்புகள் ஒப்பீட்டளவில் மிகக்குறைவு அல்லது இல்லையெனலாம். அந்த வெற்றிடத்தை, மாயனால் எழுதப்பட்ட ‘ நூறு மின்னல்கள்’ என்ற இந்நாவல் ஓரளவு நிரவுகிறது. கிழக்கு மாகாணத்தில் சூல்கொண்ட போர்ப்புயல் பற்றிய குறுக்குவெட்டுச் சித்திரமே இந்நாவலாகும்.-எழுத்தாளர், கவிஞர் தமிழ்நதி