ராஜீவ் காந்தி படுகொலை: சிவராசன் டாப் சீக்ரெட்
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கின் மர்மங்களை வெளிச்சம் போட்டுக் காட்டும் புத்தகம். இரா. பொ. இரவிச்சந்திரனின் முக்கிய நூல்!
| Category | Report |
|---|---|
| Publisher | யாழ் பதிப்பகம் |
| Language | Tamil |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Indian Politics , Sri Lankan Conflict , Terrorism |
Description
இரா. பொ. இரவிச்சந்திரன்... இராஜீவ்காந்தி கொலைவழக்கில் கால்நூற்றாண்டுக்கும் மேல் ஆயுள் தண்டனை கைதியாகச் சிறைப்பட்டிருப்பவர்களில் ஒருவர். இவர் தமிழகத்தைச் சார்ந்த, விடுதலைப்புலிகளின் ஆதரவாளர் என்பதைவிட, ஈகம்செய்யத் துணிவுகொண்டு, இளம் வயதிலேயே ஈழம்சென்று, போர்செய்யும் உத்திகள்பயின்று, பகைஎதிர்த்துக் களம்நின்று, வீரம்சிந்திய விடுதலைப்புலி என்பதே மிகவும் பொருத்தமாகும். தோழர் ஏகலைவன் அவர்களின் அரிய முயற்சியில் தொகுக்கப்பட்டுள்ள இந்நூல் அதனை விரிவாக விவரிக்கிறது.ராஜீவ் கொலை வழக்கின் மர்ம பக்கங்களை தனது 'ராஜீவ் கொலை வழக்கு: மறைக்கப்பட்ட உண்மைகள்' என்ற நூலின் மூலமாக வெளியுலகத்துக்கு கொண்டு வந்தவர் ஏகலைவன். அந்நூல் பெரும் வெற்றி பெற்றதோடு, இவ்வழக்கின் புலனாய்வையும், அதன் தொடர்ச்சியாக நடந்த விசாரணைகளையும் கேள்விக்குள்ளாக்கியது. இதைப் போலவே பரபரப்பைக் கிளப்பும் மற்றொரு நூல்தான் இது.
