Skip to content

பாஷோவின் கைத்தடி

ஹைக்கூ நூல்

₹150.00

ச.இராஜ்குமார் எழுதிய 'பாஷோவின் கைத்தடி' ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு. அழகான வார்த்தைகளில் ஆழமான சிந்தனைகள்!

Category Poetry
Publisher செங்கனி பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback

Description

ஒரு ஹைக்கூ நம்பகத் தன்மையை உருவாக்கவேண்டும். நிகழ்காலத்தில் நின்று பேச வேண்டும்.நம்பகம் என்பது பூரணமானதைப் பின்பற்ற வேண்டும்என்ற பொருளைத் தருவது. அது முழுமையானது.கொடுக்கப்பட்ட வாய்ப்பை அனுபவிக்க வேண்டும். தம்எண்ணங்களைச் சிதையாமல் வசீகரமானவார்த்தையாக மாற்றும் வல்லமை வேண்டும். கவிஞர்இராஜ்குமாரனுக்கு இருக்கிறது.- கவிஞர் நா. விச்வநாதன்ஆசையாய் வாங்கிய சட்டை பிறகொரு நாள்அடுப்படியில் கிடப்பதும், மயிலை விரட்டும் மகனின்கைகளில் நடவு விதைகள் இருப்பதும், கூட்டைத்திறந்ததும் பறவைகளுக்கு வானமல்ல. வனம்வசப்படுவதும், காட்டில் எரியும் செடியிலுள்ள நெருப்பைஒற்றைப் பறவை அணைத்துப்போவதும் கவிஞர்ச.இராஜ்குமாரின் ஹைக்கூஹைக்கூ புரிதலிலும், தொடர் செயலாற்றலிலும்விளைந்த முத்துக்களென ஒளிர்கின்றன.- கவிஞர் மு.முருகேஷ்