Skip to content

ஒளிரும் பச்சைக் கண்கள்

₹180.00

கார்த்திக் பாலசுப்ரமணியனின் 'ஒளிரும் பச்சைக் கண்கள்' - சமகால தமிழ் இலக்கியத்தின் சிறந்த சிறுகதைத் தொகுப்பு!

Category Short Story
Publisher காலச்சுவடு
Language Tamil
Year 2022
Format Paperback

Description

சமகாலத்துப் படைப்பாளிகளில் வாசகனுக்கு நிறைவளிக்கும் மிகச்சில எழுத்தாளர்களுள் கார்த்திக் பாலசுப்பிரமணியனும் ஒருவர். இவரின் கதைகளில் ஒரே வகையான களத்தையோ, சித்தரிப்பையோ காண இயலாது. இவர் புதிய அழகியல் அம்சங்களுக்காகவோ, வெறும் படிமங்களுக்காகவோ அல்லது மிகை புனைவுக்காகவோ முனைந்து பார்க்கும் எல்லைக்கு வெளியே அமர்ந்திருக்கிறார். யதார்த்தச் சித்தரிப்புகளின் மூலம் நித்திய மதிப்புமிக்க கதைகளை எழுதவல்லவராக மிளிர்கிறார்.மிக எளிமையானதொரு கதைக்களத்தில் ஊடுருவி துல்லியமான படைப்பை மொழிக்கு கையளித்து விடுகிறார். ஜன்னல், மண் போன்ற கதைகள் இதற்கு மிகச்சிறந்த உதாரணம். தனது கதையுலகின் அலங்காரமற்ற நேரடித்தன்மையையும், படைப்பின் மொத்த ஆகிருதியை வாசகனுக்கு ஊட்டிவிடத் துடிக்காத நுட்பத்தையும், பொறுமையையும் மகத்துவமான எழுத்தாளர் அசோகமித்திரனிடம் இருந்தே கார்த்திக் பாலசுப்பிரமணியன் பெற்றுக்கொள்கிறார் எனக்கருதுகிறேன்.“ஒளிரும் பச்சைக் கண்கள்” புத்தாற்றலும் உத்வேகமும் கொண்டதொரு தலைமுறையின் அர்த்தபூர்வமானதும் அடர்த்திமிக்கதுமான பிரதி. மொழியும் படைப்பாளனும் பிரகாசிக்கட்டும்!- அகரமுதல்வன்