மொழிப் போராட்டம்
இரா. நெடுஞ்செழியன் எழுதிய மொழிப் போராட்டம் - இந்தி எதிர்ப்பு இயக்கம், தமிழ் மொழி காத்தல் மற்றும் திராவிடர் உரிமைக்கான போராட்ட வரலாறு இதில் உள்ளது.
| Category | History |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304264 |
Description
தமிழகத்துக்குள் கேள்வி முறையில்லாது நுழைந்த இந்தியைத் தமிழ் மக்கள் எதிர்க்கத்துணிந்தனர். பெரியார் தலைமையின்கீழ் இந்தி எதிர்ப்பு இயக்கம் தமிழ் நாடெங்கும் பரவிற்று. அதை அலட்சியப்படுத்தச் சொல்லிற்று ஆச்சாரியாரின் ஆணவம்; அதைக் கொழுந்துவிட்டு எரியச்செய்தது மக்களின் ஆர்வம். "நாட்டு மொழியைக் காக்க வீட்டிற்கொரு பிள்ளை தேவை" என்று அறிஞர் அண்ணாத்துரை அவர்கள் முழக்கமிட்டார். சர். ஏ.டி.பன்னீர்ச்செல்வம், தோழர்கள் கே.ஏ.பி.விசுவநாதம், அ. பொன்னம்பலனார் போன்றவர்கள் நாட்டின் திக்கெட்டும் பவனி வந்து, வீரவுரை ஆற்றி வெற்றிக் களிப்பூட்டினர். காவியம் தீட்டும் கவிஞரிலிருந்து, கமண்டலம் ஏந்தி நாடு சுற்றிவரும் காவிவேட்டிக்காரர்கள் வரையுள்ள பல்வேறு பிரிவினரும் போராட்டத்தில் பங்கு கொண்டனர். ...இன்றைய நிலையில் தமிழக மக்களுக்கு-திராவிடருக்கு அவசியமுள்ள மொழிகள் இரண்டுதாம்: ஒன்று அடிப்படை அறிவுபெற; அது தமிழ். மற்றொன்று உலகியல் அறிவுபெற: அது ஆங்கிலம். இதற்கு மாறாக மற்றொரு வேண்டாத மொழியைப் புகுத்தும் மந்திரிசபையின் திட்டத்தை முழுமூச்சுடன் மக்கள் எதிர்த்து நிற்கவேண்டும்-கடைசி மூச்சு உள்ளவரையில் எதிர்த்து நிற்க வேண்டும்-எடுபடும்வரை எதிர்த்து நிற்கவேண்டும்.
-புத்தகத்திலிருந்து
