Skip to content

நெஞ்சுக்கு நீதி – நான்காம் பாகம்

₹650₹617
5% OFF

கலைஞர் மு. கருணாநிதி எழுதிய நெஞ்சுக்கு நீதி - நான்காம் பாகம் - அயோத்தி கலவரங்கள், சமூக நீதி, அரசியல் நிகழ்வுகள் குறித்த ஒரு முக்கியமான படைப்பு.

Category Report
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788119304189

Description

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டதையடுத்து நாடு முழுதும் பல இடங்களில் கலவரங்களும், தீ வைப்புகளும், சூறையாடல்களும் நடைபெற்றன. குறிப்பாக மராட்டியத்திலும் குஜராத்திலும் உயிர்ச்சேதம் அதிகமிருந்தது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமேயானால் மராட்டியத்தில் 68 பேரும், குஜராத்தில் 11 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 35 பேரும், கர்நாடகத்தில் 25 பேரும், ராஜஸ்தானில் 25 பேரும். மத்தியப் பிரதேசத்தில் 17 பேரும், ஆந்திராவில் 10 பேரும், டெல்லியில் 4 பேரும், மேற்கு வங்கத்தில் பேரும், பிகாரில் 2 பேரும், கேரளத்தில் ஒருவரும் பலியானார்கள். பின்னர் இந்த எண்ணிக்கை மொத்தத்தில் 800 பேர் என்ற அளவிற்கு அதிகரித்தது. மராட்டியத்தில் முதலில் 68 பேர் என்பது பின்னர் 125 பேர் என்ற அளவிற்கு உயர்ந்தது. குஜராத்தில் 20 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர். தேசிய முன்னணி, இடதுசாரிக் கூட்டமைப்புக் கட்சிகளின் கூட்டம் 7ஆம் தேதியன்று அண்ணா அறிவாலயத்தில் என்னுடைய தலைமையில் நடைபெற்றது. 10ஆம் தேதியன்று தமிழகம் முழுவதும் முழு அடைப்பு நடத்துவதென்று அந்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

-புத்தகத்திலிருந்து