தமிழர் தலைவர் – பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு)
சாமி. சிதம்பரனார் எழுதிய தமிழர் தலைவர் - பெரியார் ஈ.வெ.ரா. வாழ்க்கை வரலாறு - பெரியாரின் சுயசரிதை, திராவிட இயக்கம் மற்றும் சமூக சீர்திருத்தக் கொள்கைகளை அறிய சிறந்த புத்தகம்.
| Category | Autobiography |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788119304783 |
Description
இன்று பெரியார் கொள்கையைப் பின்பற்றிச் செல்லப் பல தலைவர்கள் முன்வந்துவிட்டனர். தொண்டர் கூட்டம் குழுமி நிற்கின்றது. வீரத்தாய்மார்கள் முந்தானையை வரிந்துகட்டிப் போர் முனையில் முன்னிற்கின்றனர். நாடெங்கும் தமிழ்மக்களின் வெற்றிச்சங்கு முழங்குகின்றது. சூழ்ச்சித்திரை தூள்தூளாகக் கிழிந்துவிட்டது. தமிழர் உரிமைப்போர் வெள்ளம் புரண்டோடுகின்றது. இவ்வெள்ளத்தை அணையிட்டுத் தடுத்தல் அரிது! அரிது!! பெரியாரே தடுக்க முன்வரினும் அவரையும் அடித்துச் செல்லும், இது தமிழர் உரிமை கடலுக்குள் புகுந்துதான் அடங்கும். இவ்வெள்ளத்திற்குக் காரணம் என்ன? தன்னலக்காரரின் கொடுந் தீ. அதை அணைக்கப் பெரியார் மேகம் பொழிந்த மழை. ஆகவே தமிழர் உரிமைப்போருக்குத் தலைவர் பெரியார்! பெரியார்!! பெரியார்தான் !!! பெரியார் நீடூழி வாழ்க! பெரியார் உலகெங்கும் பரவுக! பெரியார் இன்று நீதிக்கட்சித் தலைவர் மட்டுமல்ல. தமிழர்க்கே தலைவர் இன்றுமட்டுமல்ல, என்றுமே தமிழர்க்கு அவரேதான் தலைவர். ஏன்? எதிர்காலமே நீயே சொல்...
-புத்தகத்திலிருந்து
