Skip to content

வேரும் விழுதும் (பரிசல் பதிப்பகம்)

க. சுப்பிரமணியன் எழுதிய வேரும் விழுதும் - பரலியாறு மர்மம், கிராமத்தின் உண்மை மற்றும் நாவலின் ஆழமான கேள்விகளுடன் ஒரு துப்பறியும் கதை அனுபவம்.

Category Novel
Publisher பரிசல்
Language தமிழ்
Year 2023
Format Paperback
Tags Crime, Mystery, and Conflict
SKU 9789391949815

Description

கதை சொல்லியான எஞ்சினியர் பெரியப்பாவின் ஆதாவில் வளர்ந்து ஆளானவர். ஆசிரியரான பெரியப்பாவுக்கு எதைவிடவும் ஊர்முக்கியம். அவர் அப்படிப் பற்றுக்கொள்ளும் ஊரே அழியவிருக்கிறது என்ற 'ரகசியத்தை வெளியிட முடியாமல் எஞ்சினீயர் குமைவதுதான் கதையின் ஆதார உணர்வு அந்த உணர்வைப் பின்தொடர்ந்தால் வாசிப்பின் சுவாரசியத்தை அடைய முடியும். அது ஒரு துப்பறியும் கதையின் புலனாய்வு போலவும் பரவசமூட்டலாம். நாவல் வெளிப்படும் முறையில் கொண்டிருக்கும் சில கேள்விகளுக்கு விடைகாண முயல்வது வாசிப்பை மேலும் தீவிரப்படுத்தும் என்று தோன்றுகிறது. இதில் சொல்லப்படும் பரலியாறு உண்மையில் எது? மேக்கூரில் கட்டப்பட்ட அணை எதன் புனைவடிவம்? நீரில் மூழ்கிக்காணாமற் போன குழுமணி கிராமத்தின் உண்மைப் பெயர் என்ன? வாசித்து முடித்த பின்னும் மனதில் எதிரொலிக்கும் இந்தக் கேள்விகள் நாவலின் இலக்கிய வாழ்நாளை நீட்டிக்கின்றன. எழுதப்பட்ட காலத்தில் வேர் பிடித்து நின்று பிந்தைய காலத்தில் விழுதுகளை ஊன்றுவது செவ்வியல் நாவலின் இயல்பு. அதன் சான்று க.சுப்பிரமணியனின் வேரும் விழுதும்.

-சுகுமாரன்