Skip to content

பிறவழித் தாக்குதல்கள்

பாஜக ஆட்சியில் இந்தியா

எஸ்.வி.ராஜதுரை எழுதிய பிறவழித் தாக்குதல்கள் - பாஜகவின் ஆட்சி, ஜனநாயக சீர்கேடு, சமூக நீதி அழிவு குறித்த ஆழமான அரசியல் நூல். சமத்துவத்தை மீட்டெடுப்பது அவசியம்.

Category Essay
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

2014 முதல் இந்திய ஒன்றியத்தில் ஆட்சி புரிந்து வரும் பாஜக தனது ஆட்சியை வலுப்படுத்தவும் நீட்டிக்கவும் வன்முறையை மட்டும் பயன்படுத்துவதில்லை; மாறாக ஜனநாயகத்தின் ஊன்றுகோல்களாக விளங்கி அதைப் பாதுகாக்க வேண்டிய நீதித்துறை, தேர்தல் ஆணையம், கல்வி நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், காவல் துறை, பாதுகாப்புப் படைகள், கலாச்சார நிறுவனங்கள் முதலிய அனைத்தையும் பயன்படுத்துகிறது; சிறுபான்மையினர், தலித்துகள் போன்ற ஒடுக்கப்பட்ட மக்களை விளிம்பு நிலைக்குத் தள்ளுகிறது. இந்தியாவிற்கு அண்ணல் அம்பேத்கர் வழங்கிய அரசியல் சட்டத்தை, அவர் விரும்பிய குறிக்கோள்களுக்கு முற்றிலும் எதிரான வழியில் பயன்படுத்தி நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழித்துள்ளது – இவைதான் ‘பிற வழித் தாக்குதல்கள்’ இந்த அழிவு வேலைகளுக்கான சில நடவடிக்கைகள் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் நீண்டகாலம் ஆட்சிபுரிந்து வந்த காங்கிரஸாலும் பல்வேறு எதிர்க் கட்சிகளாலும் மேற்கொள்ளப்பட்டன – இந்த விஷயங்களை ஆழமான அறிவார்ந்த வகையில் விளக்கும் இந்த நூல், சமத்துவத்தைச் சீர்குலைப்பதற்கான வித்துகள் நம் நாட்டிலுள்ள பள்ளிக்கூடங்களிலேயே விதைக்கப்படுகின்றன என்பதைக் கூறுகிறது. ஜனநாயகத்தில் அக்கறை உள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் இது.

-எஸ்.வி.ராஜதுரை