Skip to content

ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம்

₹50₹47
6% OFF

ரவிக்குமார் எழுதிய ஆதிதிராவிடர் பூர்வ சரித்திரம் - ஆதிதிராவிட மக்களின் வரலாறு, சமூக மேம்பாடு, டி.கோபால் செட்டியார் பங்களிப்பு ஆகியவற்றை அறிய சிறந்த புத்தகம்.

Category History
Publisher மணற்கேணி பதிப்பகம்
Language தமிழ்
Format Paperback
Tags History, Politics, and Culture

Description

டி.கோபால் செட்டியார்:

ஆதிதிராவிடர் பூர்வசரித்திரம் என்ற நூலை 1920ஆம் ஆண்டு எழுதி வெளியிட்ட திரு டி.கோபால் செட்டியார் 1867ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் நாள் பிறந்தவர். ஆதிதிராவிட மக்களின் மேம்பாட்டிற்காகப் பாடுபட்ட முன்னோடிகளில் ஒருவர். இந்தோ ஸ்வீடன் சால்வேஷன் ஆர்மியின் தலைவராக 1923ஆம் ஆண்டு பொறுப்பேற்று காட்பாடி, அரக்கோணம், தர்மபுரி முதலான பகுதிகளில் பணியாற்றியவர். ஜார்ஜ் மன்னரை லண்டனில் சென்று சந்தித்தவர். அவர் ஆசிரியராக இருந்து நடத்திய நியூ ரிஃபார்மர் பத்திரிக்கை 15, வெங்கடராயன் சந்து, பார்க் டவுன், சென்னை என்ற முகவரியிலிருந்து வெளியாகியிருக்கிறது. நியூ ரிஃபார்மர் என்ற ஆங்கில பத்திரிகையின் ஆசிரியராக இருந்ததோடு ஆங்கிலத்திலும் தமிழிலும் பல நூல்களை எழுதியவர்.