Skip to content

ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்

--
₹500.00

ராஜீவ் கொலை வழக்கு: நளினியின் திடுக்கிடும் உண்மைகள்! பிரியங்காவுடனான சந்திப்பு பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

Category Report
Publisher யாழ் பதிப்பகம்
Language Tamil
Year 2016
Format Paperback
Tags Indian History , Politics , True Crime

Description

'ராஜீவ் கொலை: மறைக்கப்பட்ட உண்மைகளும் பிரியங்கா நளினி சந்திப்பும்' என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள இந்தப்புத்தகத்தில் பல திடுக்கிடும் தகவல்களை நளினி கூறியுள்ளதாகக் கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்டு ஆயுள் தண்டனைக் கைதியாக சிறையில் உள்ள நளினி ராஜீவ் காந்தியின் கொலை குறித்து புத்தகம் எழுதியுள்ளார். அந்தப் புத்தகத்தில் ராஜீவ் காந்தியின் மகள் பிரியங்கா தன்னை சிறையில் வந்து சந்தித்தது குறித்தும் அப்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்தும் நளினி எழுதியிருக்கிறார். இந்த புத்தகத்தில், சிறையில் பிரியங்காவை சந்தித்தது தனது வாழ்வில் நடந்த முக்கிய நிகழ்வு என்றும், இந்த சந்திப்பு முடிந்து பிரியங்கா டெல்லி சென்ற தகவல் கிடைக்கும் வரை நளினி உணவு உண்ணாமல் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார். ராஜீவ்காந்தி படுகொலை குறித்து தனக்கு முன்கூட்டியே எதுவும் தெரியாது என்றும் அதில் நளினி தெரிவித்துள்ளார்.