Skip to content

முத்தமிடும் கூழாங்கற்கள்

₹160.00

முத்தமிடும் கூழாங்கற்கள் கவிதைத் தொகுப்பு! S. Anandkumar கவிதைகளில் அன்பு, வருத்தம், மனித உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடு.

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language English
Year 2026
Format Paperback

Description

உள் உணர்வுகளை சொற்களில் வெளிப்படுத்தி கவிதையாக அழகு படுத்தத் தெரிந்த கவிஞனுக்கு இவ்வுலகில் உள்ள யாவற்றோடும் யாவரோடும் எளிதாகத் தொடர்பு கொள்ள முடிகிறது. அவனது பார்வையில் சதா ஒளிர்ந்துகொண்டிருக்கும் சிந்தனைச்சுடர் வழி இருப்பவை இன்னும் பல கோணத்தில் வெளிப்படுகின்றன. இதை உண்மைப்படுத்துகிறது கவிஞர் ஆனந்தகுமார் அவர்களின் 'முத்தமிடும் கூழாங்கற்கள்" எனும் தலைப்பிலான இந்தக் கவிதைத் தொகுப்பு. எளிய மனிதர்களின் சில குறிப்பிட்ட தருணங்கள் எப்போதுமே ஞாபகம் வைத்துக் கொள்ளும்படியான கவிதைகளோடு, அன்பு, வருத்தம், நிராகரிப்பு சிற்சில உணர்வு மேடுகளில் இவரது பேனாவின் மை நின்று விளையாடியிருக்கின்றது. வாழ்த்துகள்-கனகா பாலன்கவிதை என்பது மொழிக்கு ஆன்மாவைச் சூட்டும் ஒரு கலை. அது சாதாரண எண்ணங்களை அசாதாரண வெளிப்பாடுகளாக உருமாற்றுவதாகும். கவிதை, நேரடிப் பேச்சில் பெரும்பாலும் வெளிப்படாத மகிழ்ச்சி, துக்கம், அன்பு, போராட்டம், நம்பிக்கை போன்ற உணர்ச்சிகளைப் படம்பிடித்து, மனதையும் இதயத்தையும் தொடும் ஒரு வடிவத்தில் முன்வைக்கிறது ஒரு கணத்தை நித்தியமாக்கும். மௌனத்தை அர்த்தமாக்கும். வாழ்க்கையின் எளிய விவரங்களில் அழகை வெளிப்படுத்தும் சக்தி அதற்கு உண்டு. உருவகம், படிமம் மூலம் கவிதை மனித அனுபவத்தின் கண்ணாடியாகவும், கற்பனைக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான பாலமாகவும் மாறுகிறது., வார்த்தைகளுக்கு இறக்கை கட்டும் வித்தை தெரிந்த இந்தக் கவிஞரின் வரிகளுக்கு வானம் ஏகும் தகுதி உண்டு.-கி.சரஸ்வதி