ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுக் காலனியத் தமிழகத்தில் ஒளிப்படக்கலை அறிமுகமும் ஒளிப்படத் தொகுப்புகளும் சமூகத் தாக்கமும், 1852-1899
எஸ். ஜெயசீல ஸ்டீபன் எழுதிய ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சுக் காலனியத் தமிழகத்தில் ஒளிப்படக்கலை - காலனித்துவ காலத்தில் ஒளிப்படங்களின் சமூகத் தாக்கம் மற்றும் வளர்ச்சியைக் கண்டறியுங்கள்.
| Category | History |
|---|---|
| Publisher | நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் |
| Language | தமிழ் |
| Pages | 158 |
| Year | 2025 |
| Format | Paperback |
| Tags | History, Politics, and Culture |
| SKU | 9788198758255 |
Description
இந்த நூல் ஒளிப்படக்கலையின் விடியல், காலனியத் தமிழகத்தில் ஒளிப்படம் எடுப்பதில் காலநிலையின் தாக்கம். மற்றும் செயல்பாடுகளும் வளர்ச்சியும் (1859-1864), ஜெர்மன். ஸ்வீடிஷ், சுவிஸ் நாட்டு ஒளிப்படக்கலைஞர்கள் எடுத்த மதராஸ் நகர ஒளிப்படங்களும், தமிழ்நாட்டுச் சிற்றூர்ப்புற ஒளிப்படங்களும் (1852-1876) பற்றி விவரிக்கிறது. ஒளிப்படக்கலைஞர்கள் லின்னேயஸ் டிரிப் எட்மண்ட் டேவிட் லியோன் எடுத்த தமிழ்நாட்டின் ஒளிப்படங்களும் (1857-1858). ஒளிப்படக்கலையின் வளர்ச்சி (1867-1869) பற்றி விளக்குகிறது. மதராஸ் ஒளிப்படக் கழகமும். அதன் செயல்பாடுகளும் (1857-1896), மற்றும் மதராஸ் கலைப்பள்ளி ஒளிப்படக்கலையைப் பரப்புவதில் பங்கு (1850-1870) பற்றி தெரிவிக்கிறது. மதராசின் ஒளிப்படநிலையங்கள் (1860-1894), பிரித்தானியப் பேரரசின் கீழிருந்த தமிழ்நாட்டு மக்களின் ஒளிப்படங்களை உருவாக்குதல் (1868-1878) பற்றி தெளிவாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. புதுச்சேரியில் பிரெஞ்சுக் குடியேற்ற ஆட்சியின் கீழ் ஒளிப்படக்கலை வளர்ச்சி (1845-1899) எவ்வாறு இருந்தது என்பதை விளக்கி இவற்றின் மூலம் ஏற்பட்ட சமூகத் தாக்கம் பற்றி சுவையாக இந்நூல் அலசி ஆராய்கிறது.
