Skip to content

எங்கே மீதி நட்சத்திரங்கள்

₹80.00

பள்ளி நினைவுகளை இனிமையாக விவரிக்கும் க.சி. சோலை நாராயணன் எழுதிய 'எங்கே மீதி நட்சத்திரங்கள்' கவிதைத் தொகுப்பு!

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2023
Format Paperback

Description

இணைந்த இத்தனை மனிதர்களை ஒரே நேரத்தில் பிரிய மனம் ஒப்புக்கொள்ளவில்லை. உடலும் குரலும் இங்கு இருக்க மனம் முழுதும் நினைவுகளில் நீந்துகிறது. பேசுவதற்கே கிட்டிய நாட்கள், பிடிக்காத ஆசானைத் திட்டிய நாட்கள், சீருடையில் சீர்க் குறைந்து சிக்கிய நாட்கள், வகுப்புக்குத் தாமதமாகி ஓடிய நாட்கள், தலைமையாளர் அறையின் முன் கூடிய நாட்கள். என வேடிக்கையாய் சென்ற நாட்களும் இன்று விலையில்லாததாய் திகழ்கிறது. பள்ளி சீருடைச் சட்டையும், பார்த்தே சலித்த கால் சட்டையும், இன்னும் சில நாட்களில் இனிதே ஓய்வெடுக்கச் சென்று விடும்.சிறைபடப்போகும் அடையாள அட்டைகள் சற்றும் சிறிதும் சீண்டப்படாமல் சிரித்த படியே நின்று விடும். பக்கத்துக் கடைகளின் படிக்கட்டுகள் எல்லாம் கூட்டங்கள் இருந்தும் காய்ந்தே தான் கிடக்கும். இனித்துகிடந்த வகுப்புகளிலெல்லாம் இனி நாமில்லாமலும் கூத்துக்கள் நடக்கும். நமது பேச்சுகளும் சிரிப்புகளும் துன்பங்கள் துடைக்கும். இத்தனை அழகிய அனுபவங்கள் வேறெங்கு கிடைக்கும்? கடல் அலைகள் கரையைச் சந்திப்பது போல், மேகங்கள் எல்லாம் மலை உச்சியைச் சந்திப்பது போல், மீண்டும் ஒரு நாள் சந்திப்போமா? அந்நாளிலும், சந்தித்த அந்த நன்னாளிலும் ஒருவரை ஒருவர் இதே போல் சிந்திப்போமா? ஒரு இளையராஜா பாடல் போல் இனிதாக நிறைவு பெறுகின்ற பள்ளி என்னும் பக்கத்தை நெஞ்சின் ஒரு துளியாவது படித்துக்கொண்டே இயங்கும். மனம் வலியிலும் சுசும்கொண்டிருக்கக் கண்களைத் துடைத்துவிட்டு மனதில் ஏக்கத்துடனே பிரிந்திடுவோம். என்றோ ஒருநாள் மீண்டும் சேர்ந்திட!