மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்
சா. அனந்தகுமார் எழுதிய 'மிதக்க வைக்கும் இசைக் குறிப்புகள்' கவிதைத் தொகுப்பு! மனதை வருடும் கவிதைகள்.
| Category | Poetry |
|---|---|
| Publisher | வேரல் புக்ஸ் |
| Language | Tamil |
| Year | 2024 |
| Format | Paperback |
Description
கவிதை, உலகின் மறைக்கப்பட்ட அலைகளில் இருந்து திரையை உயர்த்துகின்றது' என்பார், பெர்சி பைசே ஷெல்லி. ச.ஆனந்தகுமார் அவர்களின் கவிதைகள் மறைக்கப்பட்ட அழகினை திரை உயர்த்தி காட்டுவதோடு நின்றுவிடாமல் மறைக்கப்பட்ட எதார்த்தங்களையும் உயர்த்திக்காட்டுகின்றன. மிதக்க வைக்கும் இசைக்குறிப்புகள் என்னும் இத்தொகுப்பின் கவிதைகள் பரிச்சயமான ஒரு பாடலை கேட்டதுபோல் மனதுக்கு நெருக்கத்தைத்தருபவை. இதன் மிகுதியானக் கவிதைகள் வெகுஜன இதழ்கள் மற்றும் இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை.-கூடல் தாரிக்தொகுப்பில் கவிதைகளுக்குத் தலைப்பில்லை. விரும்பிய தலைப்பிட்டு கவிதைகளை வாசிக்கும் சுதந்திரத்தை நமக்கு கொடுத்துள்ளார். கவிதை வாசித்தல் என்பது சிப்பிக்குள் ஒளிந்திருக்கும் முத்தை தேடுவது. என ஒரு கவிதையில் அவரே குறிப்பிடுவதைப்போன்று நீங்களும் இத் தொகுப்பை வாசித்து உங்களுக்கான முத்தை கண்டடைந்து கொள்ளுங்கள்.-ந.பெரியசாமி
