Skip to content

செய்தி தரும் சேதி

₹150.00

வெ. இறையன்பு எழுதிய 'செய்தி தரும் சேதி' நூலில், செய்திகளின் முக்கியத்துவத்தையும், அவை தரும் படிப்பினைகளையும் அறியலாம்.

Category Essay
Publisher தினத் தந்தி
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Current Events , Self-Improvement , Social Commentary

Description

உலகச் செய்திகள், தேசச் செய்திகள், மாநிலச் செய்திகள், மாவட்டச் செய்திகள் என்று அனைத்துச் செய்திகளாலும் இன்றைய செய்தித் தாள்கள் அலங்கரிக்கப்படுகின்றன. நாம் அன்றாடம் வாசிக்கும் செய்திகள், பல சேதிகளைத் தாங்கி வருகின்றன. சில செய்திகள் நம் இதயங்களை ஈர்க்கின்றன. இன்னும் சில செய்திகள் நம்மை சோகத்தில் ஆழ்த்துகின்றன. பல செய்திகள், நமக்கு அனுபவங்களைத் தருகின்றன. நாம் படிக்கின்ற பல்வேறு செய்திகள், நமக்குப் படிப்பினைகளையும், அறிவுரைகளையும் வழங்குகின்றன.அப்படிப்பட்ட செய்திகள் தரும் சேதிகளை ஐ.ஏ.எஸ். அதிகாரியும், எழுத்தாளரும் பேச்சாளருமான வெ.இறையன்பு, தினத்தந்தி ஞாயிறு மலரில் தொடர் கட்டுரையாக எழுதி வந்தார். அந்த வாசமிகு கட்டுரைத் தொடர், வாசகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் நடமாடும் ஒப்பற்ற மனிதர்களின் உன்னத செயல்பாடுகளை இந்த நூலில் அவர் சொற்சித்திரமாகத் தீட்டியுள்ளார். சுவையான சொல் விருந்து.