Skip to content

சட்டையின் நிழல்

₹210.00

லார்க் பாஸ்கரன் எழுதிய 'சட்டையின் நிழல்' கவிதைத் தொகுப்பு! வாழ்வின் நிழல்கள், மனதின் ஆழம், உறவுகளின் சிக்கல்கள் - ஒரு கவித்துவப் பயணம்.

Category Poetry
Publisher வேரல் புக்ஸ்
Language Tamil
Year 2024
Format Paperback

Description

காற்றின் பக்கம் நிழல் நின்றது வாழ்வின் பக்கம் அவன் நின்ற பின் நிழல் தடுமாறியது யூகத்தின் அடிப்படையில் ஒன்றின் சிதறல் மற்றொன்றின் ருசி என அலைக்கழிக்கப்பட்ட நேரங்களில் புல்லாங்குழல் இசை தடுமாறாமல் சுதியை பெருக்கியபடி இருந்தது.(நிழல்)மனம் மறக்கக் கூடியது என்பது உண்மையா? மறதி பல நோய்களுக்கு பிரச்சனைகளுக்கு மருந்தாக உள்ளது அந்த மறதியை மனமே திரும்பத் திரும்ப கூறிக்கொண்டு மறக்க முனைகிறது. உண்மையில் மேலோட்டமான நிகழ்வுகள் நினைவில் நிற்பதில்லை. மனத்தின் ஆழத்தில் என்றென்றும் தேங்கியிருப்பவை ஆறாத ரணங்களும் வன்ம வார்த்தைகளும் வதைக் காட்சிகளும் பழியுணர்ச்சிகளும் மட்டுமல்லாது உச்ச இன்பமடைந்த உணர்வுகளும் நிகழ்வுகளும் தாம். இது பல்வகையான உறவியல், உளவியல், சமூகவியல், மற்றும் குற்றவியல் சார்ந்து பகுத்துப்பார்க்கப்பட்டு வருகிறது. நுண்ணுணர்வு மிக்க மனத்தின் தன்மைகளை எத்தனை ஆராய்ந்தாலும் அதற்கு முற்றுப் புள்ளி இன்னும் இடப்படவில்லை. மேலே குறிப்பிட்டவற்றில் லார்க்கின் கவிதைகள் முதல் மூன்று இயல்களுக்குப் பொருத்தப்பாடாக உணர முடியும். மேலுள்ள கவிதையில் காற்றின் செயலும் நிழலின் அசைவும் எதிரும் புதிருமானாலும் புல்லாங் குழலின் நாதம் நிற்கவில்லை. அந்த நாதம் லார்க்குடையது.