Skip to content

மக்கள் கவியும் புரட்சிக் கவியும்

அறிஞர் அண்ணா எழுதிய மக்கள் கவியும் புரட்சிக் கவியும் - தமிழ் கவிதை, புரட்சி மற்றும் சமூக மாற்றத்திற்கான உத்வேகம் தரும் சிறந்த படைப்பு. இன்றே வாங்குங்கள்!

Category Poetry
Publisher ஆழி பதிப்பகம்
Language தமிழ்
Pages 64
Year 2023
Format Paperback
Tags History, Politics, and Culture
SKU 9788196290573

Description

ஏ தமிழ் நாடே! ஏ தாழ்ந்த தமிழ் நாடே! தேய்ந்த தமிழ் நாடே! தன்னை மறந்த தமிழ் நாடே! தன்மானமற்ற தமிழ் நாடே! நன்றிகெட்ட தமிழ் நாடே! கலையை உணராத தமிழ் நாடே! கடவுளின் லட்சணத்தை அறியாத தமிழ் நாடே! மருளை மார்க்கத்துறை என்றெண்ணிடும் தமிழ் நாடே! ஏ. சோர்வுற்ற தமிழ் நாடே! வீறு கொண்டெழு! உண்மைக் கவிகளைப் போற்று! உயிர்க் கவிகளைப் போற்று! உணர்ச்சிக் கவிகளைப் போற்று! புரட்சிக் கவிகளைப் போற்று!! புத்துலகச் சிற்பிகளைப் போற்று!!! மக்கள் கவிஞனின் பணி ஒரு புரட்சியாளனின் பணியாகும் - சொல்லப்போனால் புரட்சியாளனின் பணியைவிடவும் கடினமானதாகும், ஏனென்றால் மக்கள் கொடுங்கோலரை மீட்பர் என்றும், மீட்பரை கொடுங்கோலன் என்றும் தவறாகப் புரிந்துகொள்ளத் தக்கவர்கள்.

-புத்தகத்திலிருந்து