மக்கள் தீர்ப்பு (ஆழி பதிப்பகம்)
அறிஞர் அண்ணா எழுதிய மக்கள் தீர்ப்பு - வாழ்வின் அர்த்தம், சமூக நீதி, மற்றும் அறம் சார்ந்த வாழ்வை வலியுறுத்தும் சிறந்த புத்தகம். அரசியல் சிந்தனைகளைத் தூண்டும் படைப்பு.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 104 |
| Year | 2023 |
| Format | Paperback |
| Tags | Philosophy and Thought |
| SKU | 9788196290511 |
Description
வாழ்வு! என்ன பொருள் அதற்கு? உண்டு உலவி, உறங்கி எழுந்து, மீண்டும் உண்டு உலவிடும் வேலையை ஒழுங்காகச் செய்யும் யந்திரமா, மனிதன்! ஆதிக்கக்காரன் அடிபணிந்து, ஆர்ப்பரிப்போன் பாதம்பற்றி, குற்றேவல் செய்து கும்பியை நிரப்பிக்கொண்டு, கொத்தடிமையாகிக் குடும்பம் சமைத்துக் கொண்டிருப்பதா வாழ்வு? எத்தனிடம் சித்தத்தை ஒப்படைத்துவிட்டு, ஏமாளியாகிக் கிடப்பதா வாழ்வு! அவன் அப்படி எண்ணவில்லை!! வாழ்வு, ஒருபெரும் பொறுப்பு, ஓர் அரும் வாய்ப்பு, உண்மையை அறிய, அறிந்ததின் வண்ணம் ஒழுக, பிறருக்கும் அந்த ஒடுக்கும் சழக்கருடன் போரிட்டு, அறமல்லாததை, விரட்டி ஒட்டி அறத்தை நிலைநாட்டப் பாடுபடல் வேண்டும். வாழ்வு, அதற்கான ஒரு வாய்ப்பு! இந்தக் குறிக்கோளற்று இருப்பது, வாழ்வு அல்ல.
-புத்தகத்திலிருந்து
