தாண்டவராயன் கதை
பா. வெங்கடேசன் எழுதிய தாண்டவராயன் கதை - தமிழ் நாவலில் மொழி, கற்பனை மற்றும் யதார்த்தத்தின் ஆழமான சித்தரிப்புடன் ஒரு புதிய பரிமாணத்தை வழங்கும் சிறந்த படைப்பு.
| Category | Novel |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Pages | 952 |
| Year | 2008 |
| Format | Paperback |
| Tags | Life and Society |
Description
தமிழ் புனைவு வெளியில் மொழியின் அர்த்தங்களை, அதன் குறுக்கு வெட்டுத் தோற்றங்களை, கற்பனையின் யாதார்த்தத்தை, மொழியின் வாழ்நிலத்தில் சொற்களை விதைத்த நாவல் தாண்டவராயன் கதை என்பதே என் வாசக எண்ணம். இதை மீறி ஒரு கதை கூறலும் அதன் காத்திரமும் இன்று வரை தமிழ் புனைவில் சாத்தியமாகாத ஒன்று. அப்புனைவைக் கடக்க வேண்டுமெனில் அதுவும் நூலாசிரியனான பா. வெங்கடேசனாகவே இருக்க வேண்டும். ( இது உண்மையில் அவருக்கு அவராலேயே இடப்பட்ட சவாலாகத்தான் இருக்கவேண்டும்) இதை ஒரு வாசகனாக துணிந்து கூறுகிறேன். இலக்கியத்தை ஒரு துறையாகக் கொண்டு, புனைவை அதன் இன்னொரு கூறாகக் கொண்டு வாசித்தால் தமிழ் புனைவு வெளியில் தாண்டவராயன் கதை பயணித்த தூரமும் நிகழ்த்திய பாய்ச்சலும் அசாத்தியமானது. அதன் மொழிச்செழுமை ஈடு செய்ய முடியாதது.
