பெண் ஏன் அடிமையானாள் (ஆழி பதிப்பகம்)
பெரியார் ஈ.வெ.ரா எழுதிய பெண் ஏன் அடிமையானாள் - பெண்களின் அடிமைத்தனத்திற்கான காரணங்களை பகுத்தறிந்து, சமூக சீர்திருத்தங்களை வலியுறுத்தும் புத்தகம்.
| Category | Essay |
|---|---|
| Publisher | ஆழி பதிப்பகம் |
| Language | தமிழ் |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Life and Society → Gender and Equality |
Description
இந்திய நாட்டில், பெரும்பாலும் உலகத்தின் வேறு எங்கும் இல்லாததும். மனிதத் தன்மைக்கும். நியாயத்திற்கும், பகுத்தறிவிற்கும் ஒவ்வாத்துமான கொடுமைகள் பல இருந்து வந்தாலும், அவற்றுள் முக்கியமாகவும் அவசரமாகவும் ஒழிக்கப்பட வேண்டியதாகவுமிருக்கும் கொடுமைகள் இரண்டுண்டு.
அவைகளில் முதலாவது எதுவென்றால், இந்திய மக்களிலேயே பலகோடி ஜனசங்கியை உள்ள சமூகங்களைப் பிறவியிலேயே தீண்டாதவர்கள் என்று கற்பித்து, அவர்களைப் பகுத்தறிவற்ற மிருகங்களிலும் கவலமாகவும் உணர்ச்சியற்ற பூச்சி புழுக்களிலும் இழிவாகவும் நடத்துவதாகும்.
இரண்டாவது எதுவென்றால், பொதுவாக இந்தியப் பெண்கள் சமூகத்தையே அடியோடு பிறவியில் சுதந்திரத்திற்கு அருகதையற்றவர்கள் என்றும். ஆண்களுக்கு அடிமையாகவே இருக்க "கடவுளாலேயே" சிருஷ்டிக்கப்பட்டவர்கள் என்றும் கற்பித்து அவர்களை நகரும் பிணங்களாக நடத்துவதாகும். ஆகவே, மேற்கண்ட இந்த இரண்டு காரியங்களும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் இந்தியாவில் இனி அரைக்ஷணம்கூட இருக்க விடாமல் ஒழித்தாக வேண்டியவைகளாகும்.
-புத்தகத்திலிருந்து
