Skip to content

நூறு நாற்காலிகள்

ஒரு கலெக்டரின் உண்மைக் கதை

₹40.00

ஜெயமோகனின் 'நூறு நாற்காலிகள்' ஒரு அதிகாரியின் மனப்போராட்டத்தை சித்தரிக்கும் சிறுகதை. அதிகாரத்தின் உளவியல் சிக்கல்களை ஆராய்கிறது.

Category Short Story
Publisher எழுத்து
Language Tamil
Year 2011
Format Paperback

Description

உள்ளே என் மனம் அரற்றிக்கொண்டே இருந்தது. நான் என்ன செய்யவேண்டும்?என் நாற்காலிக்காக நான் போராடலாம். ஆனால் அதை என்னுடைய அற்பத்தனத்தின் அடையாளமாகச் சித்தரித்துக்கொள்வார்கள். அதையே என் இயல்பாக ஆக்கி அழியாத முத்திரை ஒன்றை உருவாக்குவார்கள். மிஞ்சிய வாழ்நாளெல்லாம் நான் செல்லும் இடங்கள் முழுக்க அந்த முத்திரை கூடவே வரும். அதிகார வராந்தாக்களில் உருவாகி நிலைபெறும் தொன்மக் கதைகளில் ஒன்றாக ஆகும். அப்படியே விட்டுவிடலாம். ஆனால் அது மேலும் இழிவுகளை என் மேல் சுமத்த நானே கொடுத்த அனுமதியாக ஆகும்.