Skip to content

இலங்கை எழுதித் தீரா சொற்கள்

₹300.00

ரமாதேவி ரத்தினசாமியின் 'இலங்கை எழுதித் தீரா சொற்கள்' - ஈழத்தின் வலிகளைப் பேசும் ஒரு ஆழமான சமூகப் பதிவு.

Category Essay
Publisher Her Stories
Language Tamil
Year 2023
Format Paperback
Tags Social Commentary , Sri Lanka , Tamil Literature

Description

'சொர்க்கம் அல்ல. இது இலங்கை' எனத் தொடங்கும் இவரது இலங்கை பற்றிய வர்ணனையில், பொன்னியின் செல்வனின் பூங்குழலியாக வலம்வரத்தொடங்கி விட்டாரோ என ஆரம்பமே ஆச்சரியப்பட வைத்தது.ஆழமான தேடல். சுவரசியமான எழுத்துநடை வாசிப்போரை இலங்கைத்தீவிற்கு அழைத்துவரச்செய்யும் உத்தி, சிந்திக்கத்தக்க கடிச்சுவைகள் எனத் தொடர்கிறது. சில இடங்களில் வாய்விட்டு கெக்காளித்து சிரிக்க வைத்தது. சில இடங்களில் புத்தபகவானைப்போல புன்னகைக்க வைத்தது. பல இடங்களில் எங்களுக்காக அழும் ஆன்மாவின் தகிப்பை உணர முடிந்தது. அநீதிக்காக பொங்கும் சீற்றத்தை காண முடிந்தது. உண்மையில் தோழி ரமாதேவி ஓர் ஆழ்ந்த அமைதி விரும்பி. சமாதானப்பிரியை என்பதை நான் அறிவேன். ஆயினும் அவருடைய இதயம் நேர் தராசில் துடிக்கும்போது ஈழ தேசத்துக்காக துடித்து நீதி கேட்பதை உணர முடிகிறது. அது மனிதர்க்கு வாய்த்த அறம் என்பேன். மிகவும் நேர்மையான தேடலும் நடுநிலையான கருத்து வெளிப்பாடும் கொண்டவை அவருடைய எழுத்துகள்.-லதா கந்தையாஎழுத்தாளர் | கவிஞர் | சுதந்திர ஊடகவியலாளர்இலங்கை