Skip to content

தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை!

₹120.00

அ. முத்துலிங்கம் அவர்களின் 'தமிழ் மொழிக்கு ஒரு நாடில்லை!' - ஒரு சிறந்த இலக்கியப் பார்வை.

Category Essay
Publisher கயல் கவின்
Language Tamil
Format Paperback
Tags Culture , Literature , Tamil Literature

Description

எனக்கு மிகவும் பிடித்தமான எழுத்தாளர் அ. முத்துலிங்கம். அவரது எழுத்துகள் தொலைதூர தேசங்களுக்குச் சென்று, பல வருசங்களுக்குப் பிறகு வீடு திரும்பிய சகோதரன் தனது அனுபவங்களைக் குடும்பத்தாரிடம் சொல்வது போன்ற நெருக்கமும் நெகிழ்வும் கொண்டது. கனடாவில் வசிக்கும் அவர் உலகநாடுகளில் பாதியைச் சுற்றிவந்தவர். அன்றாட நிகழ்வுகளை இத்தனை ரசனையோடும் ஈடுபாட்டோடும் அவதானித்து, அதிலிருந்து தனது படைப்புகளை உருவாக்கும் ஒரு எழுத்தாளரைக் காண்பது அபூர்வம். இயற்கையின் மீதான பற்றுதல்; தேடித்தேடி நல்ல புத்தகங்கள், இசை, நுண்கலை, சினிமா என்று நீளும் அவரது தேடுதல் தனித்துவமானது. முத்துலிங்கம் எழுத்துகளில் காணப்படும் உள்ளார்ந்த பகடி நினைத்து நினைத்து சிரிக்கக்கூடியது.- எஸ். ராமகிருஷ்ணன்