Skip to content

வான் நோக்கிப் பெய்யும் மழை

₹70.00

மகுடபதி எழுதிய 'வான் நோக்கிப் பெய்யும் மழை' கவிதைகள், உணர்வுப்பூர்வமான அனுபவங்களை அழகிய வரிகளில் வழங்குகிறது.

Category Poetry
Publisher பொள்ளாச்சி இலக்கிய வட்டம்
Language Tamil
Year 2020
Format Paperback

Description

காண்கின்ற காட்சிகள் உணர்வுத்தளத்திற்குத் தூண்டுதலாகிற போது மனம் திடுக்கிடவும், ஆச்சரியப்படவும் தயாராகிறது. அத்தகைய அரிய அனுபவங்களைக் கவிதையாக்க நுட்பமான பார்வை வேண்டும் . அந்த அடிப்படைக் கவித்துவ அழகியலைக் கண்டுணர்ந்திருக்கிறார் கவிஞர் மகுடபதி. பிறரின் பார்வையிலிருந்து நழுவிய காட்சிகள் குறுகிய வரிகளில் பேருலகம் காட்டும் கவிதைகளாக உருமாறியிருக்கின்றன. கவித்துவம், சமூகப் பொறுப்பாகப் பரிணமித்து வாசிப்பவர்களை சிந்திக்கச் செய்து செயல்பாட்டிற்கு நகர்த்தவும் இக்கவிதைகள் துணையாகின்றன. மாறுபட்ட காட்சி அனுபவங்கள் பாடுபொருள்களாக விரிகின்றன. மகுடபதியின் கவிதைகளை மனம் மகிழ்ந்து கொண்டாடலாம்- பொள்ளாச்சி இலக்கிய வட்டம்