Skip to content

விலங்குப் பண்ணை (சந்தியா பதிப்பகம்)

₹190₹180
5% OFF

ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய விலங்குப் பண்ணை - பண்ணையில் விலங்குகளின் புரட்சி, அதிகாரம் மற்றும் சமத்துவமின்மை பற்றிய ஒரு சிந்தனையைத் தூண்டும் நாவல்.

Category Novel
Publisher சந்தியா பதிப்பகம்
Language தமிழ்
Pages 160
Year 2016
Format Paperback
Tags Life and Society → Social Justice and Activism

Description

மூன்று மாதங்களாகப் பன்றிகள் யோசித்து 'மிருகங்கள் தத்துவ'த்தை ஏழு எளிய விதிகளில் அடக்கிவிட முடியும் என்று கண்டுபிடித்திருந்தன.

ஸ்நோபால் ஏணியில் ஏறி அந்த ஏழு விதிகளையும் சுவரில் எழுதியது. அந்த விதிகள் பின்வருவனவாகும்.

1. இரண்டு காலில் நடப்பவையெல்லாம் நம் விரோதிகள்.

2. நாலு காலில் நடப்பதும், இறக்கையுள்ளதும் நமது நண்பர்கள்.

3. மிருகம் எதுவும் துணிகள் அணியக்கூடாது.

4. மிருகம் எதுவும் படுக்கையில் படுத்து உறங்கக்கூடாது.

5. மிருகம் எதுவும் மது அருந்தக்கூடாது.

6. மிருகம் எதுவும் மற்ற மிருகம் எதையும் கொல்லக்கூடாது.

7. எல்லா மிருகங்களும் சரிநிகர் சமானமானவை.