Skip to content

பகவத் கீதை (சந்தியா பதிப்பகம்)

₹150.00

பாரதியார் எழுதிய பகவத் கீதை! துன்பங்களிலிருந்து விடுபட்டு பேரின்பம் அடைய உதவும் வேதத்தின் போதனைகள்.

Category Religious Text
Publisher சந்தியா பதிப்பகம்
Language Tamil
Year 2017
Format Paperback
Tags Hinduism , Philosophy , Religion , Spirituality

Description

வேதத்தின் கொள்கைகளை விளக்கும் பொருட்டாகவே பகவத் கீதை செய்யப்பட்டது. மனிதன் சர்வ துக்கங்களிலிருந்து விடுபடும் வழியைப் போதித்தலே இந்நூலின் முதற்கருத்து. மனிதன் எல்லாத் துன்பங்களினின்றும் விடுபட்டு, என்றும் மாறாத பேரின்பத்தை நுகர விரும்புகிறான். அதற்குரிய வழிகளையே கீதை காண்பிக்கிறது. கஷ்ட நஷ்டங்களை நாம் மனோதைரியத்தாலும், தெய்வ பக்தியாலும் பொறுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், நாம் மனமாரப் பிறருக்குக் கஷ்டமேனும் நஷ்டமேனும் விளைவிக்கக் கூடாது. உலகத்துக்கு நன்மை செய்துகொண்டே இருக்க வேண்டும். நாம் உலகத்தாருக்கு நல்வழி காட்டும் பொருட்டு புண்ணியச் செயல்களையே செய்துகொண்டிருக்க வேண்டுமென்று பகவான் கீதையில் உபதேசிக்கிறார்.- பாரதியார்