அந்த மூன்று நாட்கள் (தமிழ் அலை)
பெண்மை மற்றும் மாதவிடாய் குறித்த உணர்வுப்பூர்வமான கவிதைகளின் தொகுப்பு. 'அந்த மூன்று நாட்கள்' வாங்க!
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ் அலை |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
மாதாமாதம் தவறாமல் வரும் மாதவிடாய் பற்றி வெட்கப்படும் ஒரு இயற்கையின் உண்மையை அழகிய எழுத்துக்களால் கோர்வையாக்கி கவிதையாகப் புனைந்துள்ளீர். அதனைப் படிக்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. பெண்மையில் மாதவிடாய் என்பது மிகப் பெரிய அங்கமாகும். அது இல்லாமல் பெண்மை முழுமை அடைவதில்லை. அதனைப் பற்றிய உண்மைகள் சிறப்பாகவும், எளிதில் புரியும் படியும் உள்ளது. மேலும் கவிதைத் திறனை “மாதவிடாய்” என்ற தலைப்பில் எழுதி வெளிப்படுத்தியதில் உங்களுடைய பெண்மை வெளிப்படுகிறது.கவிதைகளில் என்னைக் கவர்ந்த வார்த்தைகள் “சமிக்ஞை, சாட்சி, மாரடைப்பு, நற்சான்றிதழ், பின்னாடிப் பார்த்துச் சொல்லேன்”. -இவ்வளவு அழகாக ஒப்பிட்டு, உண்மையையும், அதன் தன்மையையும் நகைச்சுவை கலந்து சிறப்பாக எழுதி இருக்கிறீர்கள். நீங்கள் மேன்மேலும் இவ்வாறு பெண்மையைப் போற்றியும், பெண் முன்னேற்றத்திற்காகவும் பல கவிதைகளை எழுத வேண்டும் என வாழ்த்துகிறேன்.- மரு. கமலா செல்வராஜ், மகப்பேறு மருத்துவர்
