காற்றின் பாடல்
சமயவேல் கவிதைகள் (1985 – 2025)
சமயவேலின் கவிதைகள், வாழ்வின் அழகியலையும், தத்துவச் சரடையும் இணைத்து எழுதப்பட்டவை. இன்றே வாங்குங்கள்!
| Category | Poetry |
|---|---|
| Publisher | தமிழ்வெளி |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
Description
காலம்: இடம் என்பது ஒரு தத்துவச் சரடாகவும் வெறும் கவிதை உத்தியாகவும் கையாளப்பட்ட 1980 இல், அதை வாழ்வின் அன்றாடங்களோடு இணைக்க முயன்ற அபூர்வமான கவிதைகள் கவிஞர் சமயவேலுடையவை. இருத்தலியல் நெருக்கடிகளையும் சோவியத் வீழ்ச்சியை ஒட்டி சரிவுற்ற அரசியல் தத்துவ வெளியில், பசித்தவர்களின் அரசியல் கவிதையில் தொடரும் என்று துணிச்சலோடு அறிவித்து இயங்கியவர்.அன்றாட வாழ்வின் அழகியல் நிச்சலனங்களை ஆச்சர்யமூட்டும் கவிதைகளாக மாற்றியதோடு 1990க்குப் பிறகான நிலம் சார்ந்த தமிழ்க் கவிதைப் போக்கோடு தன்னை இணைத்துக் கொண்டார். அரசியல் பிரக்ஞையை வழுவவிடாத ஆனால் கவித்துவ அழகியலை முதன்மைப்படுத்தும் கவிதைகள் இவருடையவை. எளிய மொழியில் உள்ளார்ந்த இசைமையோடு உயிர்களின் தவிப்பை, வாழ்தலின் அழகியலை, முதல் வாசிப்பிலேயே வாசகரிடம் கடத்துபவை சமயவேல் கவிதைகள். இங்கே கவிஞர் சமயவேலின் மொத்தக் கவிதைகளையும் வாசிக்கையில், கவிதை முழுப் பிரபஞ்சத்தோடும் நுட்பமான கண்ணிகளில் கட்டுண்டிருப்பதை அனுபவம் கொள்கிறோம்.
