நமது எதிரிகளும் தொழிலாளர் ஒற்றுமையும்!
அம்பேத்கரின் பொருளாதார சிந்தனைகள் மற்றும் தொழிலாளர் ஒற்றுமையின் முக்கியத்துவத்தை ஆராயும் நூல்.
| Category | Essay |
|---|---|
| Publisher | - |
| Language | Tamil |
| Year | 2026 |
| Format | Paperback |
| Tags | Economics , Politics , Social Justice |
Description
அண்ணல் அம்பேத்கர் பொருளாதார துறையில் பல்வேறு ஆய்வுகளைச் செய்துள்ளார். கொலம்பியா பல்கலைக்கழகத்தில், அவருடைய முனைவர் பட்ட ஆய்வு படிப்பே பொருளாதாரம் சார்ந்தது தான். அம்பேத்கரின் பொருளாதாரம் குறித்த சிந்தனைகளைப் பற்றி குறிப்பிடும்போது, 'அம்பேத்கரின் பொருளாதார சித்தாந்தமானது ஒரு சமூக சட்டகத்தினுள் வளர்ச்சி பெற்ற ஒன்று' என்கிறார் மேற்கு வங்கத்தைச் சார்ந்த தேவி சட்டர்ஜி.ஜாதி ஒழிப்பை முன்னெடுக்காத பொதுவுடமை இயக்கங்களின் மீது எப்போதும் அவருடைய விமர்சனத்தைக் கொண்டிருந்தார். ஒரு பக்கம் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், நிலக்கிளார்களுக்கு எதிராகவும் நிலைப்பாடுகளை கொண்டிருந்தார்.தம்பி யாழ் திலீபனின் இந்த நூல் அம்பேத்கரின் தொழிலாளர் ஏற்றுமை குறித்தான பார்வையையும், ஜாதி நீக்கத்திற்கு அவ்வொற்றுமை எவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதனையும் பகுப்பாய்வு செய்கிறது. இப்படியான ஆய்வுப் பார்வையில் அம்பேத்கரை அணுகும் போக்குகள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும். கெடு வாய்ப்பாக அண்ணல் அம்பேத்கரை பௌத்த அறிஞர் போல சுருக்கிப் பார்க்கும் போக்குகளே சமகால அம்பேத்கரியர்களிடம் காண முடிகிறது. இந்த நிலையில் இப்படியான உங்களை வரவேற்பது நமது அனைவரின் கடமையாகும்.-வெற்றிச்செல்வன்திராவிடப்பள்ளி
