Skip to content

மனிதர்களும் அமைப்புக்களும்

₹180.00

ஜேம்ஸ் ஆலனின் 'மனிதர்களும் அமைப்புக்களும்' - வாழ்க்கை மற்றும் அறநெறிகளைப் பற்றிய ஒரு ஆழமான தமிழ் புத்தகம்.

Category Essay
Publisher வள்ளியம்மை பதிப்பகம்
Language Tamil
Year 2025
Format Paperback
Tags Ethics , Philosophy , Psychology , Self-Help

Description

மனிதர்களுக்கு நன்கு பரிச்சயப்பட்டுள்ள இயற்கை விதிகள் தங்கள் செயல்பாடுகளில் என்றுமே நெறி பிறழ்வது இல்லை. காரணம் ஒன்று இருந்தால், அதற்கேற்ற விளைவு நிச்சயமாக இருக்கும். மனிதர்களுக்கு நன்கு பரிச்சயமாகியுள்ள தெய்வீக நியதிகளும், அதே போன்று தங்கள் செயல்பாடுகளில் என்றுமே நெறி பிறழ்வது இல்லை, நெறி பிறழவும் முடியாது. வாழ்க்கைச் சூழலில், ஒரு வகையான எண்ணம் அல்லது செயலை நல்கும் போது, அதற்கேற்ற விளைவு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. இந்த அற நெறிகள் அடிப்படையாக அமையப் பெறவில்லை என்றால் மனித சமூகம் இருக்க முடியாது, காரணம், தனிநபர்களின் பதில் உணர்வாக வெளிப்படும் அறம் சார்ந்த செயல்களே சமூகம் உடைந்து விழுவதைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.எனவே, பங்கிடப்படும் இன்ப துன்பங்களின் அடிப்படையில் காணப்படும் வாழ்வின் ஏற்றத்தாழ்வு நிலை என்பது அறநெறிகளின் ஆற்றல்கள் துல்லியமாகச் செயல்படுவதால் உருவாவதாகும். தடம்புரளாத இந்த நீதியே என்றும் மாற்றத்துக்கு உள்ளாகாத வாழ்வைத் தாங்கும் உறுதியான அடிப்படையாகும். இதைக் கண்டு உணர்வது, மனிதன் தன் குறைகளைக் களைந்து நிறைவு பெறுவதை உறுதி செய்யும். அவனை மெய்யறிவு மிக்கவனாகவும் மெய்ஞானம் மிக்கவனாகவும் மாற்றும். நிம்மதியும் பெருமகிழ்வும் அவன் வாழ்வில் ததும்பி வழியும்.