Skip to content

அரசமைப்பைப் பாதுகாப்பதும்! அம்பேத்கரைப் பாதுகாப்பதும்!

₹300.00

அம்பேத்கர் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நூல். ஜாதி, மதவாத சக்திகளின் சூழ்ச்சிகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

Category Essay
Publisher -
Language Tamil
Year 2026
Format Paperback
Tags Indian History , Politics , Social Justice

Description

இம்மக்கள் மீது வைத்திருக்கும் அத்தனை அன்பையும் தனக்குக் கிடைத்த வாய்ப்புகளை மறுக்காமல், தவறவிடாமல், ஜனநாயகத் தன்மையை மக்களின் பாதுகாப்புக்காகவும், அரசியல் அதிகாரத்திற்காகவும், பொருளாதார வளர்ச்சிக்காகவும், சமத்துவத்திற்காகவும், சட்டத்தை உருவாக்கிக் கொடுத்தார். இன்று, சனாதன மூடர்களால் இவ்வனைத்தும் படுகுழிக்குள் செல்லும்போதுதான் அரசமைப்பு மீதும் அம்பேத்கர் மீதும் கவனம் வருகிறது. அம்பேத்கரின் அரசியல் மீதான விமர்சனங்களுக்கு விடை தரும் நூலாகவும். அம்பேத்கரின் சமத்துவம் என்னும் சட்டத்திற்கு எதிராக நிற்கின்றவர்களின் முகத்திரையைக் கிழிக்கும் நூலாகவும், ஆறாத புண்ணாக இன்றைக்கும் நீடிக்கும் ஜாதி, மதவாத, பாசிச சக்திகளின் சூழ்ச்சிகளையும், அணுகுமுறைகளையும் வெட்ட வெளிச்சமாக்கியுள்ளது இந்நூல். அம்பேத்கரின் உழைப்பு மட்டுமின்றி இன்றைய ஜனநாயகத் தன்மைக்கு அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதன் அவசியமும், அந்த வேலையை யார் மிகச் சரியாகப் பார்க்கின்றனர் என்பதையும் சிறப்பாகப் பதிவு செய்திருக்கிறார் நூலாசிரியர். பாரதிய ஜனதா கட்சியின் அரசமைப்புச் சட்ட எதிர்ப்பு, பழங்குடி, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் ஓட்டுத் திரட்சி, திடீர் அம்பேத்கர் மீதான மோடியின் பாசம் என்று ஒவ்வொன்றையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கிறார்.- பதிப்பகத்தார்