Skip to content

ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2)

₹350

சுஜாதா எழுதிய ஏன்? எதற்கு? எப்படி? (பாகம் 2) - அறிவியல் உண்மைகள், நகைச்சுவை உவமானங்கள் நிறைந்த புத்தகம்! சுஜாதாவின் கேள்வி-பதில் தொகுதி, அறிவை எளிதாக்கும் சிறந்த புத்தகம்.

Category Article
Publisher விகடன் பிரசுரம்
Language தமிழ்
Format Paperback
Tags Science and Knowledge

Description

'சுஜாதா' என்ற வார்த்தைக்கு அறிவியல் தமிழ் அன்பர்களின் மத்தியில் அறிமுகம் எதுவும் தேவையில்லை. அதிலும், ஜூ.வி. வாசகர்களுக்கு சுஜாதா என்றதுமே 'ஏன்? எதற்கு? எப்படி?' தான் நினைவுக்கு வரும். ஆச்சரியமூட்டும் அறிவியல் உண்மைகளை மிக எளிதாக அவர் விளக்கும்போது 'ஜாடிக்கேற்ற மூடி' போல, குபீரெனக் கிளப்பிவிடுகிற நகைச்சுவை உவமானங்களும் உச்சக்கட்ட ரசனைக்கு உள்ளானவை. 'ஏன்? எதற்கு? எப்படி?' - முதல் தொகுதி இன்றைக்கும் பல இளைஞர்களின் விருப்பத்துக்குரிய ரெஃபரன்ஸ் புத்தகமாக விளங்குகிறது.

தொடர்ந்து புதிய வாசகர்களும் அதை வாங்கிப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள். நீண்ட‌ இடைவெளிக்குப் பிற‌கு, 'கேள்வி-ப‌தில் ப‌குதியை மீண்டும் ஜூ.வி-யில் தொட‌ங்க‌லாம்' என்று சுஜாதாவிட‌ம் கேட்ட‌போது, 'நான் த‌யார்... ஆனால், கேள்விக‌ளை எழுதி அனுப்புவ‌தில் வாச‌க‌ர்க‌ளுக்குப் ப‌ழைய‌ ஆர்வ‌ம் இருக்குமா?' என்று நியாய‌மான‌ ச‌ந்தேக‌த்தையும் எழுப்பினார். ஜூ.வி. வாச‌க‌ர்க‌ள் மீது நான் கொண்டிருக்கும் அசைக்க‌ முடியாத‌ ந‌ம்பிக்கை இம்முறையும் பொய்க்க‌வில்லை.