களம் – காலம் – ஆட்டம்
₹80₹76
5% OFF
சபரிநாதன் எழுதிய களம் - காலம் - ஆட்டம் - தாய்க்கும் மகனுக்கும் இடையேயான உணர்வுப்பூர்வமான கதை. இழப்பு, நினைவுகள் மற்றும் வாழ்க்கையின் சுழற்சிகளைப் பற்றி சிந்திக்கத் தூண்டும் நாவல் இது.
| Category | Poetry |
|---|---|
| Publisher | பாரதி புத்தகாலயம் |
| Language | தமிழ் |
| Year | 2017 |
| Format | Paperback |
| Tags | Emotion and Inner Life |
Description
ஒரு பெட்டியையும்
ஒற்றைக் குச்சியையும் கொண்டு
அம்மா ஓர் அதிசயத்தைச் செய்தாள்
நான் சிரித்தேன்
அவள் மறுமுறையும் அதை நிகழ்த்திக்காட்டினாள்
நான் மறுபடியும் சிரிப்பேன் அவள் மறுபடியும் நிகழ்த்துவாள்
அவள் வேறுபக்கம் திரும்பிய போது நான் அழத்துவங்கினேன்
அதனால் அதை இன்னொருமுறையும் செய்தாள்
அவள் திரும்பும்போதெல்லாம் நான் அரற்றுவேன்
சாந்துப் பொட்டிட்ட வெண்கலவிளக்கின் முன்னே
மீண்டும் மீண்டும் மீண்டும் செய்துகாட்ட வேண்டியதாகிவிட்டது அவள்
ஒரு தீக்குச்சியைப் போல் அதிசயம்
புகை கசிய அணைந்து போகும் வரை.
- சபரிநாதன்
