Skip to content

சாதத் ஹசன் மண்டோ கதைகள்

₹380₹361
5% OFF

சாதத் ஹசன் மண்ட்டோ எழுதிய சாதத் ஹசன் மண்டோ கதைகள் - சமூகத்தின் யதார்த்தமான பிரதிபலிப்பு, வன்முறை மற்றும் காதல் போன்ற மனித உணர்வுகளை ஆழமாகப் பேசும் கதைகள்.

Category Short Story
Publisher நற்றிணை பதிப்பகம்
Language தமிழ்
Year 2026
Format Paperback
Tags Life and Society

Description

மண்ட்டோ தனது கருத்தைக் கதைகளில் துணிச்சலுடன் வெளிப்படுத்தியதால் பல்வேறு கண்டனங்களுக்கு ஆளானார். ஆனால் அவர் தொடர்ந்து தனது எழுத்துக்களில் அந்தப் போக்கைக் கையாண்டார். இலக்கியம் எவ்வளவு அசிங்கமான பிரதிபலிப்பாக இருந்தாலும் சமூகத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்று அவர் நம்பினார். நான் ஏன் எழுதுகிறேன் என்ற அவரது புகழ்பெற்ற கட்டுரை, மிகைப்படுத்தல் இல்லாமல், விமர்சனத்திற்குப் பயப்படாமல் உண்மையை நேர்மையாகச் சித்தரிப்பதில் அவருக்கிருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.

வன்முறை. காதல், பேராசை, வாழ வேண்டிய நிர்ப்பந்தம், வாழ்க்கையின் அர்த்தத்திற்கான தேடல் போன்ற உலகளாவிய மானுட அனுபவங்களை மண்ட்டோவின் கதைகள் பேசுவதால் அவை காலத்தால் அழியாதவை. அவரது அசைக்க முடியாத நேர்மையும், மனிதர்கள் மீதிருக்கும் ஆழ்ந்த பச்சாதாபமும் அவரைத் தொடர்ந்து படித்துக் கொண்டாடும் ஓர் எழுத்தாளராக ஆக்குகிறது.

அவர் மறைந்து பல வருடங்களுக்குப் பிறகும். இலக்கியம் எவ்வாறு சமூக விதிமுறைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கலாம். விவாதத்தைத் தூண்டலாம். மனிதனின் நிலையை வெட்ட வெளிச்சமாக்கலாம் என்பதை அவரது படைப்புகள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன.