வியாசை
வியாசை: பிரவின்குமாரின் யதார்த்தமான சிறுகதைத் தொகுப்பு! சென்னையின் வாழ்வை இலக்கியமாகச் சொல்லும் படைப்பு.
| Category | Short Story |
|---|---|
| Publisher | வாசகசாலை |
| Language | Tamil |
| Year | 2021 |
| Format | Paperback |
Description
“சமகாலத்தின் யதார்த்தவாத எழுத்துக்கள்” என்ற பெருந்தலைப்பில் பிரவின்குமார் சிறுகதைகளும் அடக்கம். மொழிப் பாவனைக்கும் புறக்காட்சியின் விரிவுக்கும் முக்கியத்துவம் வழங்காமல் ஒரு கதையை சொல்லி முடிக்கும் தீவிரமான வேகத்துடன் எழுதிச் செல்லும் இவரின் கதையுலகிற்கு இன்றைய சூழலில் ஒரு கவனிப்பு நிகழ வேண்டுமென விரும்புகிறேன்.இந்த விருப்பம் ஒரு வாசகனாக எனக்குள்ளிருந்து புறப்படுகிறது. ஏனெனில் பிரவின்குமார் எழுதுகிற களமும் வாழ்வும் எனக்கு முக்கியமானது. கதையில் அவர் பயன்படுத்தும் நேரடியான மொழி அவதானிப்புக்குரியது. பெருமளவில் இலக்கிய ரீதியாக பொருட்படுத்தப்படாமல் இருக்கும் சென்னையை களமாகக் கொண்டு இலக்கியமாக சொல்லப்புகும் படைப்புக்களில் பிரவின்குமாரின் கதைகளுக்கு முக்கிய இடமுண்டு.- எழுத்தாளர் அகரமுதல்வன்
